கல்வி எனும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் கொண்டு உலகத்தையே மாற்ற முடியும் Share On
SOCIOLOGICAL CATEGORY ARTICLE |

இம்மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகளின் சிறப்புக் காலம். மாணவ மாணவியர் எந்தப் பள்ளி, எந்தக் கல்லூரி என தெரிவு செய்யும்வகையில் பதைப்புள்ளாகியிருக்கும் காலம்.  இவர்களைக் காட்டிலும் பெற்ற வயிறுகள் துடிக்கின்ற காலம். தாம் ஈன்ற செல்வங்களின் எதிர்காலம், இன்று தெரிவு செய்யும் கல்விக் கூடங்களில்தான் இருக்கிறது என்பதால், கல்விக் கூட வாயில்களில் கால்கடுக்க நின்று தவம் செய்யும் பெற்றோர்கள் இடமில்லை, பள்ளிச் சேர்க்கை முடிந்துவிட்டது, என்று எழுதப்பட்;ட பலகைகள் பல பள்ளிகளில் தொங்கவிடப்பட்டுள்ளன. சிபாரிசுக் கடிதங்கள் கண்டு கொள்ளாமல் மேசைமீது குவிந்துகிடக்கின்றன. ஓயாமல் ஒலிஎழுப்பிக் கொண்டிருக்கும் தொலைபேசிகளை எடுப்பாரில்லை. சில பள்ளிகளில் பரிந்துரைக் கடிதங்கள் வாங்குவதே இல்லை. பள்ளித் தலைமையாசிரியர்கள் கல்லூரி அதிபர் மற்றும் முதல்வர்கள் அவ்வளவு பிசி, தனியார்பள்ளிகள், கல்லூரிகள் பெரும்பாலானவை வெறும் வணிகக் கூடங்களாகிவிட்ட நிலையில், அவைகளைப் பற்றிப் பேசுதல் விரயமே என்பதால் விட்டுவிடுவோம். எல்லோரும் அறிந்த ஒருண்மையை மீண்டும் பேசுதலால் என்ன பயன்? பள்ளிகளில் எத்தனை: மெட்ரிக் பள்ளிகள், சி.பி.சி.இக்கள். அவைகளும் ஆங்கில வழியாக மாணவக் குழந்தைகளை அல்லற்படுத்தும் பள்ளிகள்.

இவை ஒருபக்கம் :

மேற்கண்ட முகத்துக்கு மறுமுகம் ஒன்றுள்ளதே.

சென்ற வாரம் நாளிதழில் வெளிவந்த செய்தியில் கிராமத்து ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஒரே ஒரு குழந்தைதான் உள்ளதாம். இந்தக் குழந்தை வேறுபள்ளிக்குச் சென்றுவிட்டாலோ, அல்லது படிப்பை நிறுத்திவிட்டாலோ, அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் இருவர்க்கும் வேலை இல்லை.

கடந்த பலவாண்டுகளாக இன்னொரு கவலை தரும் செய்தியொன்றையும் கேள்விப்படுகிறோம். சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் பல மாணவர் சேர்க்கையின்றி மூடப்பட்டு வருகின்றன. மாநகராட்சிப் பள்ளிகள் சமூகத்தின் நலிந்த பிரிவினர்க்கு கல்வி கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட பள்ளிகள். இப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் உள்ளனர். உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. ஏனிந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதில்லை.

சமூகத்தின் ஒதுக்களுக்கும் பாகுபாட்டிற்கும் உள்ளன. பிரிவினர்க்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகள் பல மக்களுக்கு எட்டாதூரத்தில் உள்ளன.(No Access) போதிய உட்கட்டுமான வசதிகள் இல்லை. ஏன்? பல பள்ளிகளில் ஆசிரியர்களே  இல்லை. இப்பள்ளிகளிளெல்லாம் அரசுப் பள்ளிகளாக இருக்கின்றமையாலே இப்பள்ளிகளுக்கு இன்று மரியாதைஇல்லை. இப்பள்ளிகளைத் தேடி மாணவர்கள் வருவதில்லை. பல பள்ளிகள் மூடும் தருவாயில் உள்ளன.

பொதுப் பள்ளிகளில் மக்களுக்குப் ஈர்ப்பு இல்லை. தமிழ்வழிப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பது நம் கலாச்சாரத்திற்கும், மாணாக்கர்களின் எதிர்காலத்திற்கும் சேதம் விளைவித்துவிடும் என்ற பொய்யான நம்பிக்கையில் இப்பள்ளிகள் துறக்கப் பெறுகின்றன. அப்படியே இப்பள்ளிகளை நம்பி வருபவர் யாராயிருப்பர்? அவர்களும் சமூகத்துள் ஒதுக்கப்பட்டோர், புறக்கணிக்கப்பட்டோர் என்போரே!

கத்தோலிக்கு சேவையை வெளியிடும் நம் மறைமாவட்டப் பள்ளிகளின் நிலை என்ன?

இன்று பொதுப் பள்ளிகள் என்ன வகை பாதிப்;புகளுக்கு உள்ளாகின்றனவோ அதே வகை பாதிப்புகள் அனைத்தும் மறைமாவட்ட பள்ளிகளும் உள்ளாகின்றன.

பங்குகள் தோறும்,  ஆலயங்களைக் கட்டியெழுப்பிய நாம் பக்கத்தே ஒரு பள்ளியையும் கட்டினோம். இந்தியாவில் தொடக்கக் கல்விக்கு முக்கியத்தும் கொடுத்தவர்களே கிறித்தவர்கள்தாம் எனில் அப்பணி பங்குதளங்களில் தான் ஆரம்பமாயிற்று என்பர். கிறித்தவர்களின் கல்விப்பணி நம் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதல்ல, மறை பரப்புப் பணி  முதன்மைப் பணியாக இருந்தது. மறைமரப்புப் பணிக்கு எழுத்தறிவு முதன்மையானது என்பதை உணர்ந்த கிறித்தவர்கள், ஆலயங்களோடு பள்ளிப் பணியையும் இணைத்தனர். இப்பள்ளிப் பணிக்கு மறைபரப்பும் பணி நோக்கமாக இருந்தமையால், மறைபரப்புப்பணி தாய் மொழியில்தான் நடைபெற முடியும் என்பதால், தாய்மொhழி வழி கல்விக்கே முதன்மை தரப்பட்டது. ஆரம்பக் கல்வி, தமிழ்வழிக் கல்வி என்பவையே கிறித்தவக் கல்வி ஆயிற்று. இந்த முதன்மைப் பணிக்கு இன்று வந்த கேடென்ன? இன்று மறைமாவட்டப் பள்ளிகளின் நிலை என்ன? இந்தியக் கல்வி அமைப்பில் காணப்பெறும் அனைத்துக் கேவலங்களையும் கிறித்தவர் நடத்தும் கல்வி அமைப்புகளும் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளன.

இதனை இன்னொருதலைப்பில் வேறொரு கட்டுரையில் பார்க்கலாம். ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்லி விடல் சரியாக இருக்கலாம். இன்று நாம் நடத்தும் கல்வி  கூடங்களில் கிறிஸ்தும் இல்லை,கல்வியும் இல்லை என்பது தான்உண்மை.

இந்தியக் கல்வி அமைப்பு இரட்டைத் தன்மையுடையது (Dual System) இரட்டை என்பது வெறும் எண்ணல்ல. இரட்டையுள் பன்முகத்தன்மை இருந்தால் ஏற்கலாம். இந்த இரண்டில் தன்மையுள் சமம் மறுக்கப்பட்ட போதும் சமமற்ற சமூகத்தில், சமத்தை நிலை நாட்ட வேண்டிய கல்வி சமத்தை மறுத்து அநீதியைக் காக்கிறது. சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கின்ற மக்களுக்கு ஒருவகைக் கல்வி, செல்வத்தில் வாழ்வோர்க்கு இன்னொருவகையான எல்லா வசதிகளும் நிறைந்த கல்வி. சமணற்ற பள்ளிகள், சமமற்ற வசதியோ,சமணற்ற முறையில் மாணவர்கள் சந்திக்கும் நடைமுறைகள் இந்த அப்பட்டமான சமணற்ற பள்ளிகளுக்கு நடத்தப் பெறும் தேர்வுகள் மட்டும் ஒரே மாதிரியாம், என்ன வேடிக்கை பாருங்கள். சமணற்ற அமைப்பில் சமமாக நடத்தப்படும் தேர்வில், வெற்றி பெறப்போவது யார்? மீண்டும் சமத்துவமின்மை மறு உற்பத்தி செய்ய, நடத்தப்படும் தேர்வு முறையில் என்ன நீதி இருக்கிறது?

சமணற்ற கல்வி அமைப்பைக் கட்டிக்காக்கும் இந்த அவலத்துள் கிறித்தவர்களும் தன் பெருவாரியான மனித வளத்தை இக்கல்விச் சேவை (!)யுள் முதலீடு செய்துள்ளனர்.  தனியார் மயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தில் எல்லாமே வணிக மயமாக்கப்பட்ட நிலையில் நம் கல்விப் பணியின் ஏற்புடைமை தான் என்ன? நம் ஆயர் பேரவைகள் துறவற சபைகளின் பேரவைகள் கல்வி ஆர்வலர்கள் எங்கோ ஓரிடத்தில் அமர்ந்து இன்றைய கல்விப் பணியின் நோக்கம் பற்றி, ஏற்புடைமை பற்றி யோசிக்க மாட்டார்களா?

பிரபல விடுதலைக் கல்வியாளர் பவுலே பிரையர் கல்விக்கான நோக்கம் இருவாகையானது என்பார். 

  1. ஒன்று விடுதலைக் கல்வி
  2. மற்றொன்று ஒடுக்கும் கல்வி.

 இன்றைய சமூக அமைப்பு இயங்கும் கல்விமுறை யார் சார்பானது? யாருக்கானது? எதற்காகக் கொடுக்கப்படுகிறது? எதை மறுத்து, யாரைப் புறந்தள்ளி யாருக்கு கொடுக்கப்படுகிறது என்ற விமர்சன பூர்வ கேள்விகளைக் கேட்கிற ஆற்றலைப் பெற வேண்டிய காலக் கட்டாயத்தை உணர்ந்துள்ளோமா?

கிறித்தவத்தின் மொத்தக் கல்வி முறை ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் நம் மறை மாவட்டப் பள்ளிகள் மூலம் கிராமத்து ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி அளித்து வருவதில் மாற்றுக் கருத்தில்லை.

 கிராமங்களில் இயங்குவதாலோ அல்லது தமிழ்வழிக் கல்வி என்பதாலோ, அரசுப் பள்ளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையே நம் பள்ளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இது ஏன் அரசு நம் உதவிக்கு வராவிடில், நம் ஆசிரியர்கள் பலர் வேலை இழந்து போவர் என்பது  திண்ணம். மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகையில், அரசு தரும் சில சலுகைகளால் சமாளித்து வருகிறோம். ஏன் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில்லை ஏன் மெட்ரிக் பள்ளிகளில் நிரம்பிவழிகின்றன? இம்மாதியான கேள்விகளை நம் ஆசிரியர்கள் மத்தியில் கூட எழுவதில்லை.

நம் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களிடமாவது இம்மாதிரியான விவாதம் எழுகின்றபோது நாம் கல்விப் பணியை அமைக்க உதவலாம்.

மேலே சொல்லப்பட்ட பவுலே பிரையர் அவர்கள் ஆசிரியர்களின் பங்கு பற்றிப் பேசும் போது ஆசிரியர்களை பாஸ்க் (Pasch) என்பார் பாஸ்க் என்ற சொல்லுக்கு கடத்துதல் என்ற பொருள். அடிமைச் சுழலிலிருந்து விடுதலைக்கு இட்டுச்செல்பவர்களை ஆசிரியர்கள் என்பார்! நாம் எம்மாதிரியான அடிமைச் சுழலில் இருக்கிறோம் என்பதையாவது அறிவோமா? அறியப்படுகின்ற போது, நம் கல்விமுறை சமத்துவத்தை மறுத்து சமத்துவமின்மையை மறுஉற்பத்தி செய்வதையும் புரிந்து கொள்ளலாம் கல்விப் பணியால் உலகின் கண்களைத் திறந்தவர் நாம் என்று புகழப் பெறும்.

நாம் இன்னும், கொஞ்ச தூரம் செல்ல வேண்டாமா? 

பேரா. தேவசகாயம்

நாகமலைபுதுக்கோட்டை, மதுரை.

COMMENTS

Share On

More Articles

இன / மத அழிப்பு முயற்சியில் பலிகடா ஆக்கப்பட்டது ..

ஆசிஃபா எனும் பெயர் கொண்ட 8 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள கதி கொடுமையானது; அதன் பின்னணியிலான அரசியல் அதைவிடக் கொடுமையானது. இதனை விளக்கக் கோரி பொது மக்களிடம் நியாயம் வேண்டுவதுதான் இந்த துண்டுப் பிரசுரத்தின் நோக்கம்.

நிகழ்வு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவ…

இயற்கையோடு இயல்பாக வ..

காப்பீட்டு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் ஒரு தம்பதியிடம் தன் நிறுவனத்தின…

புற்றுநோய்க் களமா தம..

இயற்கை தவறாகப் பயன்படுத்தப்படும் போதெல்லாம் அது ஒரு பேராபத்தாக வெடிக்கிறது. நாம் க…

Non-Violence: A Styl..

Non-Violence: A Style of  Politics for Peace. This is  the title of the …

New Published Books