ஒப்பற்ற புனிதரே புனித சூசையப்பரே.. Share On
SPIRITUAL CATEGORY ARTICLE |

எனக்கு மிகவும் அறிமுகமான ஒரு குருவானவர் அசாமிலே இறைப்பணியும், கல்விப் பணியும் செய்து கொண்டிருக்கிறார். அவர் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் திருநிலைப்படுத்தப்பட்டார். பணியாற்ற அங்கு சென்றிருக்கிறார்.

அவரின் பணித்தளம் ஒரு மலைப்பகுதி, காடுகள் நிறைந்த வனப்பகுதி. அங்குள்ள மக்கள் பூர்விகமாகவே விவசாயத் தொழில் செய்து வருகிறார்கள். பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும், வாழ்ககைத்தரத்திலும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள்.

என் அறிமுக குரு அங்கு பணியாற்றிக் கொண்டிருப்பவர் தன் அனுபவங்களை இவ்வாறு குறிப்பிட்டார். “சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவைப் பிறப்பிடமாய் கொண்ட குருவானவர் ஒருவர் இங்குப்பணியாற்ற வந்தார். முதிர்வயதில் இன்றும் இங்கு மக்கள் முன்னேற்றப் பணி செய்து கொண்டிருக்கிறார். 30ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து இந்த மக்களை மிக அன்புடன் நேசித்து ஆதரவு காட்டி கல்வி நிலையங்களைத் தொடங்கி, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர பாடுபட்டு உழைத்திருக்கிறார். அவர்கள் ழொழியைக் கற்று அவர்களின் குடும்பங்களில் ஒருவராய் இடம்பெற்று இம்முதிர் வயதிலும் அன்புப்பணி செய்கிறார். மிகுந்த பக்திமான் புனித சூசையப்பரின் மீது அளவுகடந்த அன்பு கொண்டு அவரையே பின்பற்றி அவரைப் போலவே நற்குணங்கள் கொண்டவராக இருக்கிறார். இந்த முதிர்வயதிலும் எங்கள் வழிகாட்டியாக இருக்கிறார்” என்றார்.

விவிலியத்தில் யோபு தம் வாழ்வைக்குறித்து சொல்லும் பொழுது இவ்வாறு கூறுகிறார்.

“நான் முடவருக்குக் காலாக இருந்தேன்

கை இழந்தோருக்கு கரமாக இருந்தேன்

பார்வை  இழந்தோருக்குக்  கண்ணாக இருந்தேன் என்கிறார்.

பரம தந்தை அன்னை கன்னிமரியாளை எப்படி இயேசுவுக்குத் தாயாக இருக்கும்படி முன் குறித்து வைத்தாரோ அப்படியே புனித சூசையப்பரையும் மாதாவுக்கு கணவரைப் போலவும் இயேசுவுக்கு வளர்ப்புத் தந்தையாய் இருக்குமாறு முன்குறித்து வைத்தார்.

புனித சூசையப்பரின் கரத்தில் இருக்கும் லீலிமலருக்கு ஒரு மரபு பிண்ணனி உண்டு. அவரின் பரிசுத்தவாழ்வுக்கும்,கற்புநிறை தூய்மைக்கும் அது ஒரு அடையாளம்.

அன்னை கன்னிமரியாள், ஜென்மப்பாவ மாசு அணுகாத பிறவியாய் இருந்ததால் பரிசுத்தமும் அழகும் நிரம்பிய இளம் மங்கையாக இருந்தார். எனவே அநேகர் அவரைத் திருமணம் செய்ய முன்வந்து கொண்டே இருந்தார்கள்.

அப்பொழுது பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்ட சிமியோன் தீர்க்கதரசி, திருமண மண்டபத்தில் பெண் கேட்க வந்தவர்களிடம் யார் கரங்களில் உள்ள ஊன்றுகோல் தளிர்க்கிறதோ அவர்கள்தான் மரியாளுக்குக் கணவராக வரமுடியும் என்றார்.இந்த நிகழ்வை வேடிக்கை பார்க்க வந்தவரான புனித சூசையின் கோலில் வெண்மலர் தளிர்த்தது. அதன்பின் அவர் மாதாவுக்குக் கணவரானார்.

பரம தந்தை நீதிமானாகிய புனித சூசையப்பருக்கு இயேசுவின் மீட்புப் பணியில் பங்கு பெறும் பாக்கியத்தையும் கொடுக்கிறார். தூய ஆவியினால் கருவுற்ற மரியாளை வானதூதரின் வார்த்தையின்படியே ஏற்று ஒரு கணவரைப்

போல இருக்க சம்மதிக்கிறார். அன்புடன் நேசிக்கும் ஒருதாய் போல் மரியாளைப் பாதுகாக்கிறார்.

பெத்லேஹேம் வீதிகளில் மரியாள் இயேசுவைப் பெற்றெடுக்கப் புகலிடம் தேடிய போது பொறுமையும,அன்பும், கனிவும், நிறைந்தவராகவே நல்லிடம் தேடுகிறார்.

இயேசு இறைமகன் மாட்டுக் குடிலில் பிறந்த போது தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த பாலன் இயேசுவை இறைமகனாய் விசுவசித்து ஆராதனை செய்கிறார்.

பாலன் இயேசுவைத் தூக்கிக் கொண்டு எகிப்து நாட்டிற்கு ஓடிப்போ என்றபோது இறைபராமரிப்பிலும் இறைவழிநடத்துதலிலும் நம்பிக்கைவைத்து அந்நிய நாட்டில் மூன்று ஆண்டுகள் இறைத்திட்டத்திற்கு கீழ்ப்படிந்து திருக்குடும்பத்தைப் பாதுகாக்கிறார்.

நாற்பது நாட்கள் நிறைவுற்ற பாலன் இயேசுவை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கச் சென்றபோது சிமியோன் தீர்க்கரசி பாலன் இயேசுவைப் பற்றிய இறைவாக்காக உலகம் முழுதும் இவரால் மீட்பைக் காணும் என்ற அருள்மொழி கேட்டு இறைப் புகழ்பாடுகிறார்.

12 வயதில் காணாமல் போன இயேசுவைக் கண்டுபிடித்த போது மட்டில்லா மகிழ்வு கொண்டு மாதாவையும் சிறுவன் இயேசுவையும் நாசேரத்துக்குக் கூட்டிச்சென்று எளிய தச்சுத்தொழிலில் திருக்குடும்பத்தைப் பராமரிக்கிறார்.

நீதிமானாகிய புனித சூசையப்பர் இயேசுவின் மீட்புத் திட்டத்தில் பெரும்பங்கு வகித்தவர். இயேசுவின் வளர்ப்புத்தகப்பன் இயேசுவைப் பாலப்பருவத்திலும் தூக்கிää அணைத்து அன்புசெய்து உலக மீட்புக்காய் அவரை ஒப்புக் கொடுக்கிறார்.

இவ்வாறு திருக்குடும்பத்தின் பாதுகாவலராக இருந்த புனித சூசையப்பர் இன்றும் நமக்காகப் பரிந்துபேசும் ஒப்பற்ற புனிதராய் விண்ணகத்தில் விளங்குகிறார். நம்மைப் போல் எல்லா துன்பமும் அனுபவித்தவர். எனவே துன்பப்படும் யாவருக்கும் ஆசீர் பெற்று தருகிறார்.

இவர் வாய் திறந்து ஒரு வார்;த்தை கூடப் பேசாத நிலையை விவிலியம் காண்பிக்கிறது. எனினும் ஒப்பற்ற புனிதராய் உலகம் அவரைப் போற்றுகிறது.

கார்மேல் பெண் துறவியர்களின் பாதுகாவலரே புனித சூசையப்பர்தான். நற்படிப்பின் பாதுகாவலராக நன் மரணத்தின் துணைவராக அநேக கல்வி நிறுவனங்களின் ஆலயங்களின் அன்பு நிறுவனங்களின் பாதுகாவலராக இருக்கும் புனித சூசையப்பரிடம் நாளும் நம்பிக்கைக் கொண்டு ஜெபிப்போம்.

அருட்தந்தை.ஜெகநாதன்

அய்யம்பாளையம்

COMMENTS

Share On

More Articles

இருள் வாழ்வு ஒளியாகும்..

அடியேன் 2000-ம் ஆண்டில் இயேசுவின் மீட்புப் பணியில் பங்குபெற்ற இஸ்ராயேல் நாட்டிலுள்ள புனித இடங்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். இயேசுவின் வாழ்வில் பங்குபெற்ற பரிசுத்த இடங்கள் என்னையும் பரிசுத்தப்படுத்தியது.

இயேசு சிலுவையில் மரித்த கல்வாரிமலையில் இ…

யோபு ஆகமம் - புதிய ப..

அடியேன் வேதாகமத்தைப் பலமுறை வாசித்திருக்கிறேன். இறைவார்த்தைகளைத் தியானித்து ஜெபித்…

தந்தையே, உமக்கு விரு..

“இந்தத் தவக்காலம் முழுவதும் தண்ணி அடிக்க மாட்டேன்னு என் மனைவிகிட்ட வாக்குக் …

அர்ப்பணவாழ்வு! இன்னு..

அர்ப்பணவாழ்வு! இன்னும் முடியவில்லையா? "இரக்கத்தின் கதவுகளை வெவ்வேறு கோவில்களில் தி…

அருள்பணியாளர் லூயி ல..

அருள்பணியாளர் லூயி லெவேயை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியது இல்லை. நம்மில் பலர் …

New Published Books