மதுரை மக்களால் “ரோசாப்பு துரை” என்று அன்போடு அழைக்கப்பட்ட பாரீஸ்டர் ஜார்ஜ் ஜோசப் ஒரு தீவிர விடுதலைப் போரட்ட வீரர், சட்ட வழக்கறிஞர், மதிப்புபெற்ற பத்திரிக்கையாளர், காந்தியின் உற்ற நண்பர் 1887 ஜுன் 5ல் கேரளாவில் செங்கனூரில் பிறந்தார். இலண்டனில் சட்டம் பயின்றபோது இந்திய தேசிய விடுதலைப் போரட்டத்திலே நாட்டம் கொண்டார் பின்னர் சென்னையிலும், மதுரையிலும் வழகóகறிஞராக பணிபுரிந்தார். “ஹோம் ரூல்” என்னும் சுதேசி இயக்கத்தில் இணைந்தார். மதுரையில் குற்றப்பரம்பரையாக்கப்பட்ட பிறமலைக்கள்ளர் சமுதாயத்தின் கைரேகை போரட்டத்திற்கு ஆதரவாக போரடி அவர்களின் மாண்பிற்காக உழைத்தார். ஆகவே, மதுரை வாழó இச்சமூகத்தினர் இவரை ‘ரோசாப்புத்துரை’ என்று அழைத்தனர். இன்றளவும் இச்சமூகத்தில் பிறக்கின்ற பெண் குழந்தைகள், “ரோசப்பூ” என்று அன்போடு பெயரிடப்படுகின்றனர். மதுரையில் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்காக முதன்முதலில் தொழிற்சங்கத்தை ஏற்படுத்தினார். இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கெடுப்பதற்காக காந்தியால் அனுப்பப்பெற்ற 3 பேரில் இவரும் ஒருவர். அங்கு இந்தியா இந்தியர்களாலேயே ஆளப்பட வேண்டும் என்று முழங்கினார். காந்தியோடு இணைந்து ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக செயலாற்றினார். இவரது மதுரை இல்லத்தில் காநóதி, ராஜாஜீ ஆகியோர் தங்கி நாடு தழுவிய விடுதலை போரட்டத்தை முன்னெத்தனர்.
COMMENTS