A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/magazine_category_model.php

Line Number: 64

Catholicusevai - Madurai

பெண்களின் பங்கேற்புத் திருச்சபை! Share On
ARTICLE |

கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெறுவாள்...

உலக பெண்கள் தினம் மார்ச் - 8

பெண்கள் தினமும் விவிலியமும்  என்றவுடன்  பளிச்சென என் மனதில்  உதித்த வார்த்தைகள் ‘மரியாள் என்ற பெண்ணின் வாழ்க்கையின் சவால்கள் அதை அவள்  எதிர்கொண்ட விதம், விடுதலையை நோக்கிய பயணத்தை  அவள் நகர்த்திய வரலாறு,  இவற்றின் மேல் கட்டமைக்கப்பட்டது தானே கத்தோலிக்க  திருச்சபை.   ஆனால் அதில் ‘மரியாள் என்ற விடுதலைப் பயணத்தை எதிர்கொண்ட கட்டமைத்;த பெண்ணின் பங்கு வெறும் சடங்குகளுக்குள்  புதைந்து போனதன் மர்மம்தான் என்ன?

                வரலாற்றில் பெண்ணின் தலைமைää பெண்களின் பங்கெடுப்புää இவற்றை மறைத்துவிட்ட ஒரு ஆணாதீக்க சமூகத்தின் வெளிப்பாடாகத்தானே திருச்சபையும் இருந்து வருகிறதா? கேள்விகள் எழாமல் இல்லை...! 

இன்று  பெண்கள் மீதான வன்முறை பல்வேறு  வடிவம் பெறுகிறது.  பெண்களை ‘சமையல்காரிகளாக” ‘வீட்டுவேலை செய்பவளாக” சுருக்கி வைத்திருக்கிறது       நம் சமூகம்.பெண்களிடம் பொதுவாக  நீங்க  என்ன பண்றீங்க?    என்று  கேட்டால் நான் “சும்மா வீட்டில் தான் இருக்கேன் அல்லது கொஞ்சம் ஆங்கிலம் கலந்த தமிழில் “நான் ஹவுஸ் வொய்ப்” என்று  சொல்வதைத்தான் கேட்டிருக்கிறோம்.  பெண்கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலே சாதனை படைத்த  பெண்கள் பலர் இருக்கää பெண்களை வெறும் சமையல்காரியாகவும், வீட்டு வேலைக்காரியாகவும் அவளது ‘சமூகவெளிகளை” ஆணாதிக்க சமூகம்  சமையல் அறைக்குள்; சுருக்கி விட்டது. இதன் மூலம் நம் சமூக வளர்ச்சி ஒரு நூற்றாண்டுக்கு பின் தள்ளப்பட்டது என்பது தான் உண்மை.

                சரி, திருச்சபை என்ன செய்தது? மைய நீரோட்டத்தின் விடுதலைக்கெதிரான கூறுகளுக்கு  எதிராக  புதியதோர் உலகம் செய்வது தானே திருச்சபையின் பணி? ஆனால்  விவிலியத்தின் தொடக்க நூலிலேயே ஆரம்பிக்கிறார்கள் நம்மவர்கள். நம்  கற்பனையை சிறகடிக்க விடுவோம் எங்கே...?

நம் மூதாதையர்கள் - முதல் பெண்ணும் முதல் ஆணும் உலா வந்த சுவர்க்கபுரியான ‘ஈடென் தோட்டத்திற்கு’ விலக்கப்பட்ட மரத்தின்  வழியே ஏவாளும், ஆதாமும்  உலா வரää  ஏவாள் மட்டும் ‘பாவக்கனியை’ சுவைத்தாள் என்று முதல் பெண் ஏவாளை ஒரு ‘குற்றவாளியாக’ தொடக்க நூலிலேயே சித்தரிக்கவில்iயா  நாம்? முதல் பெண்ணையே ‘குற்றவாளியாக்கி’ வெற்றி பெற்று விட்டோம், அப்புறமென்ன... கொஞ்சம் சலுகை கொடுப்போம் என்று ரூத், எஸ்தர்  போன்ற பெயர்களை  கண்துடைப்புக்காக களத்தில் இறக்கியுள்ளோம்.  இவை விவிலிய உண்மைகள் என்றாலும்,  விவிலியமும்  பெண்களின் பார்வையில் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டும் மறுபரிசீலனை, மறுஆய்வு,  விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் தானே!

பெண்களால்  சாதிக்க முடியாதது என்ன? வரலாற்றில் பெயர்கள் பெண்கள் நிரூபித்துக் காட்டவில்லையா?  புத்தாண்டுக்கு அடுத்த நாள்  அருகில் உள்ள கோவில்களுக்குச் செல்வது தென் மாவட்டங்களில் வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு நான் சென்ற கோவில்  ‘கிளாரிந்தா” என்ற சிறிய அழகான ஆலயத்திற்கு.  பாளையங்கோட்டையில் உள்ள நம்  ஆயர் இல்லத்திற்கு அருகே சிறிய தோட்டத்தின் மத்தியில்  அமைந்துள்ளது ‘கிளாரிந்தா” ஆலயம்.   யார் இந்த கிளாரிந்தா?  அங்கு இருந்த  கல்வெட்டுகளை கண்டவுடன் நினைவு தஞ்சாவ10ர் குக்கிராமத்திற்குச் சென்றது.  தஞ்சாவ10ர் குக்கிராமத்தில் உள்ள இந்த பார்ப்பண பெண், சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவில் வாழ்ந்தவர். ‘கிளாரிந்தா”வின் கணவர் இறக்கிறார். அவரை உடன்கட்டை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன.  உடன்கட்டை ஏறுதல் அல்ல உடன்கட்டை ஏற்றுதல் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் கணவன் இறந்தவுடன்  ‘நான் உடன்கட்டை ஏறுகிறேன்” என்ற எந்தவொரு பெண்ணும் முன்வந்து நெருப்பில் குதித்ததாக எந்த ஒரு வரலாறும் இல்லை. கணவரின் இறப்பிற்கு பின் அழகும்ää இளமையும்  நிறைந்த ‘சிறுமியான மனைவி” (ஏனென்றால் அப்போது   திருமணங்கள் பெண்களின் 12 வயதுக்குள் நடந்து விட்டன)  சிறுமியான மனைவி வேறொரு  ஆணை மணக்கும் வாய்ப்பு கண்டிப்பாக நிகழும், அப்போது சொத்துக்கள்  கைமாறி  போய்விடக் கூடாது என்று நிகழ்த்தப் பட்டது தானே உடன்கட்டை ஏறுதல்! நம்ம கிளாரிந்தாவும் உறவினர்களால் உடன்கட்டை ஏற நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.  நெருப்புகொழுந்து விட்டு எரிகிறது.  மூட்டிய தீயில்  யாக மந்திரங்கள் வெப்பமாகி கரைகின்றன.  இந்த நிகழ்வு ஆங்கிலத்தில் “Sati” என்று அழைக்கப்படுகிறது.  ஆனால்,  உண்மையிலேயே இது ‘பெண்களுக்கு எதிரான சதி தான்”.

அப்போது தஞ்சாt+ரில் இருந்த ஒரு ஆங்கிலேயர்  இந்த செய்தியை கேள்விப்படுகிறார்.  கிளாரிந்தாவை காப்பாற்ற முடிவு செய்கிறார்.    சுற்றிச் சுற்றி  கொழுந்து விட்டெரியும் நெருப்பு சுவாலைகளில் இருந்து  கிளாரிந்தா காப்பாற்றப்படுகிறாள்.  பின் அவள்  திருமுழுக்கு  பெற்று ‘குளோரிந்தாவாக” மாறுகிறாள்.  தொடர்ந்து மறைப்பணி ஆற்றுகிறார். கிபி. 1778 - 1806 ஆண்டுகளில் சாதி ஒழிப்பு பெண் விடுதலை, சமூக நீதி  போன்ற  கருத்துக்களின் அடிப்படையில் அவள் ஆற்றிய  பல்வேறு சமூகப் பணிகளின் அடித்தளமாக இன்று முகிழ்த்து நிற்பதுதான் இந்த சிறு ஆலயம்.  குளோரிந்தா கிளாரிந்தாவாக மருவி நிற்கிறார்.  தற்போது அவர் ஆரம்பித்த இந்த சிறு ஆலயம்  தென்னிந்திய திருச்சபையின் (CSI) திருநெல்வேலி மறை மாவட்டமாக இன்று பரிணமித்து நிற்கின்றது.  இது இன்று ஆசியாவிலேயே மிகப் பெரிய  CSI மறை மாவட்டம். இதற்கு வித்திட்டவர் ஒரு பெண்,இந்து விதவையாக இருந்து கிறிஸ்தவத்தை தழுவிய ஒரு பெண்! பெண் விடுதலை கருத்துக்களை எழுத வேண்டும்  என்றவுடன்  ஏனோ எனக்கு குளோரிந்தாவின் ஞாபகம் தான் வந்தது. 

கத்தோலிக்க திருச்சபை பெண் விடுதலையில் சாதிக்கவே இல்லையா?  பெரிய அளவில் சாதித்து உள்ளோம் நாம்.  பெண்கள் குழுவாக  திருமணம் ஆகாமல் தனித்து வாழ்வது எந்த மதத்திலும் இல்லாதிருந்த காலம்.   மேற்குலக     பெண்ணியவாதிகளே ‘தனியே வாழும் பெண்கள் என்ற கருத்தாக்கத்தை உரையாடலை  மிகத் தாமதமாகவே துவக்கினர். ஆனால் அதற்கு முன்பே திருச்சபை, பெண்கள் திருமணம் ஆகாமல் தனித்து குழுவாக இயங்குவதை அங்கீகரித்துள்ளது.  திருமணத்தை புறக்கணித்து பெண்கள் குழுவாக தனித்து இயங்குவது, தலைமை ஏற்பது, முடிவுகள் எடுப்பதுää பொது நீரோட்டத்திலும், கிறிஸ்தவ நீரோட்டத்திலும் பங்கெடுப்பது என்பது சாதாரண விசயம் அல்ல.

தந்தை பெரியார் கூட, தனது மாநாடுகளுக்கு அறைகூவல் விடுக்கையில், தனித்து வாழும் பெண்கள், விதவைகள் என் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். ஆனால், பெண்களின் தலைமையை  அப்போதே திருச்சபை அங்கீகாரம் செய்தது.

பெண் கல்விக்கும், கத்தோலிக்க திருச்சபைக்கும் நெருங்கிய ஆழமான தொடர்பு உண்டு. ‘சூத்திரனுக்கு ஏது சாத்திரங்கள்’ ?  என்ற  இறுக்கமான சாதிய படிநிலை அமைப்பில் ஆண்களுக்கே கல்வி மறுக்கப்பட்ட நிலையில்,

பெண் கல்வி கானல் நீராகவே   இந்திய சமூகத்தில்  இருந்தது  இத்தகையச் சமூக சூழலில் பெண் கல்விக்கான கதவுகளை விரிய திறந்து சமூக மாற்றத்திற்கு வித்திட்டது கத்தோலிக்கத் திருச்சபை.

இன்று வரை பெண்கள் சமய ரீதியாக  தீட்டு என்ற கருத்தாக்கத்தினால் ஒதுக்கி வைக்கப்படுவது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.  இது  சமூக அரசியல் தளங்களில்  பெண்களின் பங்கெடுப்பை  சுருக்கி அல்லது ஒதுக்கி விடுவதன் மூலம் இன்னும் நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டே தான் இருக்கிறது.  ஆனால், திருச்சபையின் அகராதியில் தீட்டு என்ற வார்த்தையே எப்போதும் இருந்தது இல்லை.  குறிப்பாக,பெண்களின் பங்கெடுப்பு என்று வரும் பொழுது, தீட்டு என்ற வார்த்தையை தன் காலடியில்  போட்டு  மிதித்தது   கத்தோலிக்கத் திருச்சபை.

திருச்சபை பெண் கல்விக்கு தன் கதவுகளை அகல திறந்து இருக்காவிடில், இந்திய, தமிழ் சமூகத்தின் முன்னேற்றமே பல நூற்றாண்டுகள் பின் தள்ளி போயிருக்கும் இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் சில கேள்விகளையும் நான் எழுப்பியே ஆக வேண்டும்.

  • பெண்கள் தொடர்பான அடிப்படைவாத கருத்துகளில் இருந்து திருச்சபை முற்றிலுமாக விலகி விட்டதா?
  • ஏன் பெண்களுக்கு இன்னும் குருத்துவம் மறுக்கப்படுகிறது?
  • உலக திருச்சபையில் (Universal Church)  முக்கிய முடிவுகள் எடுக்கும்  பொறுப்புகளில் எத்தனை சதவீதம் பெண்கள் உள்ளனர்?
  • திருச்சபை பெண்கள் தொடர்பான பொது பிரச்சனைகளில் தொடர்ந்து மௌனம் காப்பதேன்?

இவைகளுக்கு விடை தேடும் பயணமாக ‘பெண்கள் தின” நினைவுகள் நம்மை      இட்டுச் செல்லட்டும்.

‘கன்னி   கருத்தாங்கி    ஒரு   மகனைப்   பெறுவாள்...” மரியாள் சந்தித்த சவால்களை இன்றைய  சமூக சூழலுக்கு  ஏற்ப  திருச்சபையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே நமது விருப்பம்.

 

வழக்கறிஞர். மேரிரஜினி

 

COMMENTS

Share On

More Articles

தமிழக அரசியலில் கிறிஸ்தவர்களின் பங்கு 2026..

மதுரை மக்களால் “ரோசாப்பு துரை” என்று அன்போடு அழைக்கப்பட்ட பாரீஸ்டர் ஜார்ஜ் ஜோசப் ஒரு தீவிர விடுதலைப் போரட்ட வீரர், சட்ட வழக்கறிஞர், மதிப்புபெற்ற பத்திரிக்கையாளர், காந்தியின் உற்ற நண்பர் 1887 ஜுன் 5ல் கேரளாவில் செங்கனூரில் பிறந்தார். இலண்டனில் சட்டம் பய…

மனித அறிவு உமிழ்ந்த ..

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானைச் சரணடைய வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத…

விண்ணைத் தாண்டும் கன..

என் பையனை உலகப் புகழ் பெற்ற கல்லூரியில் சேர்த்திருக்கிறேன். என் மகனை ளுவயவந டீயமெ …

பெற்றோர்கள் மகிழ்ச்ச..

உலக பெற்றோர் தினம் ஜூன் - 1  கொடுப்பதற்கு, தன் சொத்தில் மிகப்பெரிய பங்கை எழுத…

தமிழுக்குக் கிறித்தவ..

உலகதாய் மொழி தினம் - 21 பிப்ரவரி 2016 தமிழ் இலக்கிய வரலாற்றில் கிறித்தவர்களின் தொண…

New Published Books