A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/magazine_category_model.php

Line Number: 64

Catholicusevai - Madurai

விண்ணைத் தாண்டும் கனவுகளுக்கு வழி அமைப்போம்! Share On
ARTICLE |

என் பையனை உலகப் புகழ் பெற்ற கல்லூரியில் சேர்த்திருக்கிறேன். என் மகனை ளுவயவந டீயமெ வாங்கின பள்ளியில் சேர்த்திருக்கிறேன். மகளை படிக்க வைக்க ஒரு லட்சம் செலவு செய்திருக்கிறேன். இப்படி பிறக்காத குழந்தைக்கு கூட மிக சிறந்த கல்வி நிறுவனங்களில் முன்பணம் கட்டி...

    வளர்ந்த பிள்ளை தொடங்கி பிறவாத குழந்தைகளின் கனவை கூட கடைசரக்காக்கி விற்றுக்கொண்டிருக்கிறது நமது சமூகம். “”இழவு காத்த கிளி போல” கணக்கற்ற தொகையை கல்விக்கு செலவிட்டு செல்வமிக்க வாழ்வுக்காக காத்திருப்போரே! நீங்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால கனவை களவாடிவிட்டீர்கள் என்றே தோன்றுகிறது.

    ”ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவுமா? இன்று உண்மையில் நம் பிள்ளைகளுக்கு தேவையானது உயர்தரக்கல்வி அல்ல உறவை வளர்க்கும் கல்வி தன்னலத்தை வேரறுத்து சமுதாய அக்கறை துளிர்க்கும் தரமான வாழ்க்கை கல்வி. இதை நாம் தேடிச் செல்லும் சொகுசான வாழ்க்கை கற்றுத் தராது.    தான் தனது என்ற எல்லைகள் கடந்த எதார்த்த கல்வியை யார் தருவது?    இன்றைய சமுதாயத்திற்கு தேவைப்படுவது மக்கள் நலன் பேணாத கலெக்டர்கள் அல்ல ...
ஒற்றுமையை கட்டியெப்பாத என்ஜினியர்கள் அல்ல
தன்னலமுள்ள வழக்கறிஞர்கள் அல்ல...
கல்வியை காசாக்கும் கல்வி நிறுவனங்கள் அல்ல..

    நேர்மறை சிந்தனை கொண்ட சமுதாய அக்கறை கொண்ட மகத்தான மனிதர்களை தான் உருவாக்க வேண்டும்.

    நாம் வாங்கி குவித்திருக்கின்ற பட்டங்கள் நமது வெற்றியை நிர்ணயிப்பதில்லை. நமது வெற்றியின் அளவுகோல் நேர்மை உண்மை அன்பு மனிதநேயம் சமய நல்லிணக்கம் சாதி சமய வேறுபாடின்மை பகிர்வு இவைகளே.

    நமது இளைய தலைமுறையினரின் கனவுகள் சாதாரணமானதாக இல்லாமல் சரித்திரத்தில் இடம் பிடிக்கச் செய்வோம்.

    இவ்வளவு தான் வாழ்க்கை என்ற எல்லைகளை தகர்த்து தரணி முழுவதிலும் வளம் பெற வாய்ப்பளிப்போம்.

    பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் சவால்களும் சாதனைகளும் சந்திக்கப்பட்டால் தான்  சரித்திரத்தில்  இடம்  பிடிக்க  முடியும்.
முயலை  குறிவைத்து  அம்பு  எய்து  அதை கொல்பவனை விட யானையைக் குறி வைத்து அதை தப்பவிட்டவன் சிறந்தவன் என்கிறார் திருவள்ளுவர்.

    குறுகிய எல்லைகளைக் கடந்து பறந்த சிந்தனையால் பாரினை நிரப்புவோம்.

    இயேசுவின் இறையாட்சி கனவு இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நனவாகி கொண்டிருக்க காரணம் பிறர் நலம் நாடிய அவரது அன்பு செயல்களே.
காந்தியின் கனவில் விடுதலை பிறந்தது
பாரதியின் கனவில் புரட்சி பிறந்தது
அன்னை தெரசாவின் கனவில் அன்பு  இல்லங்கள் பிறந்தது.இப்படி பிறரின் வாழ்வில் ஒளியேற்ற துணிந்தோரில்  நாமும் இணைவோம்.

விண்ணைத் தாண்டும் கனவுகளால் விந்தைமிகு உலகம் படைப்போம்.    

அருட்தந்தை. அற்புதசாமி
இணையாசிரியர்.

COMMENTS

Share On

More Articles

தமிழக அரசியலில் கிறிஸ்தவர்களின் பங்கு 2026..

மதுரை மக்களால் “ரோசாப்பு துரை” என்று அன்போடு அழைக்கப்பட்ட பாரீஸ்டர் ஜார்ஜ் ஜோசப் ஒரு தீவிர விடுதலைப் போரட்ட வீரர், சட்ட வழக்கறிஞர், மதிப்புபெற்ற பத்திரிக்கையாளர், காந்தியின் உற்ற நண்பர் 1887 ஜுன் 5ல் கேரளாவில் செங்கனூரில் பிறந்தார். இலண்டனில் சட்டம் பய…

மனித அறிவு உமிழ்ந்த ..

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானைச் சரணடைய வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத…

பெண்களின் பங்கேற்புத..

கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெறுவாள்... உலக பெண்கள் தினம் மார்ச் - 8 பெண்கள் தினம…

பெற்றோர்கள் மகிழ்ச்ச..

உலக பெற்றோர் தினம் ஜூன் - 1  கொடுப்பதற்கு, தன் சொத்தில் மிகப்பெரிய பங்கை எழுத…

தமிழுக்குக் கிறித்தவ..

உலகதாய் மொழி தினம் - 21 பிப்ரவரி 2016 தமிழ் இலக்கிய வரலாற்றில் கிறித்தவர்களின் தொண…

New Published Books