இன / மத அழிப்பு முயற்சியில் பலிகடா ஆக்கப்பட்டது 8 வயதுச் சிறுமி: இது நியாயமா? Share On
SOCIOLOGICAL CATEGORY ARTICLE |
ஆசிஃபா எனும் பெயர் கொண்ட 8 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள கதி கொடுமையானது; அதன் பின்னணியிலான அரசியல் அதைவிடக் கொடுமையானது. இதனை விளக்கக் கோரி பொது மக்களிடம் நியாயம் வேண்டுவதுதான் இந்த துண்டுப் பிரசுரத்தின் நோக்கம்.

நிகழ்வு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்திலுள்ளது ரசானா எனும் மலைக் கிராமம். இது ஜம்முவிலிருந்து 72 கி.மீ தொலைவிலுள்ளது. இங்கு பக்கர்வால் என்ற ஆதிவாசி-இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள் ஆசிஃபா எனும் 8 வயது சிறுமி. வழக்கம் போல 10.01.2018 அன்று தங்களது குதிரைகளை மேய்ச்சலுக்காக காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றாள் அன்றிரவு குதிரைகள் வீடு திரும்பின. சிறுமி வீடு வந்து சேரவில்லை. எங்கு தேடியும் சிறுமி கிடைக்கப் பெறாததால் ஜனவரி 12 ஆம் தேதி அவளது தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட அதிகாரி தீபக் காஜீரியா கூறிய பதில் “உனது மகள் யாருடனாவது ஓடியிருப்பாள்”.

காவல் துறையினர் சிறுமியைக் கண்டுபிடிக்க முயற்சி எடுப்பது போல் நடித்தனரே தவிர எதார்த்தத்தில் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. இந் நிலையில் ஜனவரி 17 ஆம் தேதி சிறுமி ஆசிஃபாவின் சடலம் சிதைந்த நிலையில் ஒரு புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சடலம் கிடைத்து 6 நாட்கள் கழிந்த நிலையில் ஜனவரி 23 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் மாண்புமிகு. மெகபூபா முப்தி அவர்கள் மாநில குற்றப்பிரிவு சிறப்புக் காவல் துறையினரின் தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையின் முடிவுகள் நெஞ்சை உலுக்குவனவாக இருந்தன.

விசாரணை அறிக்கை வெளிப்படுத்திய உண்மைகள்:

அறிக்கையின் படி ஆசிஃபா கடத்தப்பட்டிருந்த காலக்கட்டத்தில் (எட்டு நாட்கள்)

அப்பகுதியில் இருந்த இந்து கோவிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாள்;
  • அவளுக்கு மயக்க மருந்து ஃ போதை மருந்து கொடுக்கப்பட்டிருந்தது;
  • ஏறக்குறைய 8 நாட்கள் சித்தரவதைக்கும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டிருந்தாள்;
  • அவள் கடத்தப்படுவதற்கும் பல்வேறு வகையிலான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதற்கும் மூல காரணமாயிருந்த நபர் மேலே குறிப்பிட்ட இந்து கோவிலின்
  • பூசாரியான சஞ்சி ராம் என்பவர். 60 வயது நிரம்பிய அவர் ஒரு ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி;
  • சஞ்சி ராமோடு இணைந்து கடத்தல் சித்திரவதை பாலியல் வன்கொடுமை கொலை ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஏழு பேர். அவர்களில் நால்வர் காவல் துறை அதிகாரிகள்: 1) சுரேந்தர் வர்மா 2) திலக் ராஜ் 3) ஆனந்த் தத்தா மற்றும் 4) தீபக் காஜீரியா. இந்த தீபக் காஜீரியாதான் குழந்தையைக் காணவில்லை என்று புகார் கொடுக்கச் சென்ற ஆசிபாவின் தந்தையிடம் “உனது மகள் யாருடனாவது ஓடியிருப்பாள்” என்று கூறியவர்.
  • மீதமுள்ள மூன்று நபர்களில் ஒருவர் பர்வேஷ் குமார் இவர் ஒரு மைனர் சிறுவன். மீரட்டிலிருந்து தனது நண்பனை அழைத்து பாலியல் வன்கொடுமையில் பங்கேற்க வைத்திருக்கிறான் சஞ்சி ராம்.
  • இறுதியாக சிறுமி ஆசிஃபாவைக் கொல்ல முடிவெடுத்த கயவர்கள் காவல் அதிகாரி தீபக் காஜீரியாவிடம் யோசனை கேட்டிருக்கின்றார்கள். தீபக் காஜீரியா சிறுமி கொலை
  • செய்யப்படுவதற்கு முன் ‘நானும் ஒரு முறை பாலியல் வன்கொடுமை செய்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு அப் படுபாதகச் செயலைச் செய்திருக்கிறான்.
  • அதன் பின்னர் சிறுமி ஆசிஃபாவைக் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு அவரது தலையிலும் நெஞ்சிலும் பெரிய கற்களை போட்டு நொறுக்கியிருக்கின்றார்கள். அவரது கால்களை முறித்திருக்கின்றார்கள். அதன் பின்னர் ஆதாரங்களையெல்லாம் திட்டமிட்டு அழித்து விட்டிருக்கின்றார்கள். அழிப்பதற்கு உதவிய காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

பிரேதப் பரிசோதனை முடிந்த பின் பெறப்பட்ட ஆசிஃபாவின் உடலை தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் புதைக்க பெற்றோர் முற்பட்ட போது இந்துத்தவ அமைப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தகராறு செய்துள்ளனர். வேறு வழியறியாத பெற்றோர் ஏழு மைல்கள் சடலத்துடன் நடந்து சென்று இன்னொரு கிராமத்தில் இறுதிச் சடங்கினை நடத்தியிருக்கின்றனர். ‘சடலத்தைக் கையில் வைத்திருக்கும் போது கூட எப்படி இவர்களால் மனிதாபிமானமின்றி நடந்து கொள்ள முடிகின்றது? என்று அங்கலாய்திருக்கிறார் ஆசிஃ பாவின் தாத்தா.

விசாரணை முடிந்த நிலையில் குற்றம் சுமத்தப்பட்ட 8 நபர்கள் கைது செய்தயப்பட்டனர். கைதை எதிர்த்து இந்துத்துவா அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. ஹிந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு கண்டனப் பேரணி பொதுக் கூட்டம் நடத்தியது. பேரணியில் தேசியக் கொடி ஏந்திச் செல்லப்பட்டது; பாரத் மாதா கீ ஜே’ எனும் முழக்கம் எழுப்பப்ட்டது. அக் கூட்டத்தில் மாநில பாஜக அமைச்சர்கள் சவுத்ரி லால் சிங் மற்றும் சந்தர் பிரகாஷ் கங்கா ஆகியோர் பங்கேற்றனர். தாங்கள் பாரதீய ஜனதா கட்சி தலைமையின் கட்டளைக்கிணங்கத்தான் அக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகப் பின்னர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தனர். இறுதியாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யச் சென்ற காவல் துறையினரை நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்க வழக்கறிஞர்கள் சங்கத்தினர் (Bar Council Members) முயற்சித்தனர்.

மேலும், ஆசிஃபாவிற்காக வாதாட முன் வந்த பெண் வழக்கறிஞர் தீபிகா ராஜவத் மிரட்டப்பட்டுள்ளார். இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும் போது “நான் எப்போது வரை உயிருடன் இருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் பலாத்காரம் செய்யப்படலாம்; கொல்லப்படலாம். நேற்று கூட மிரட்டப்பட்டேன். நான்ஆபத்தில் இருப்பதை உச்ச நீதி மன்றத்தில் முறையிட உள்ளேன்” என்று தெரிவித்தார்.

இக்கொடூர நிகழ்வுக்கான பின்புலம்:

ஆசிஃபா எனும் இஸ்லாமியச் சிறுமியின் மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட கொலை ஏதோ உணர்ச்சி வேகத்தில் செய்யப்பட்ட கொடுஞ் செயல் அல்ல. மாறாக இது அப் பகுதியில் வாழ்ந்து வரும் பக்கர்வால் மற்றும் குஜ்ஜார் இன ஆதிவாசி இஸ்லாமிய சமூகத்தினரை பயமுறச் செய்வதற்காகவும் அவர்களை அப்
பகுதியிலிருந்தே வெளியேறச் செய்வதற்காகவும், அரசு இயந்திரங்களின் துணையோடு திட்டமிட்டு செய்யப்பட்ட சதிச் செயல்.

அப் பகுதியில் வாழும், குஜ்ஜார் மற்றும் பக்கர்வால் இன மக்கள் அரசினால் ஆதிவாசிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள். அவர்கள் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள். அவர்களில் குஜ்ஜார் இன மக்கள் நிலங்களைக் கொண்டிருப்பவர்கள். அதோடு மாடு வளர்ப்பிலும், பால் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றவர்கள். பக்கர்வால் இனத்தினர் நாடோடிகள். தங்களது கால்நடைகளோடு பயணிக்கின்றவர்கள். கோடை காலத்தை லடாக்கிலும் குளிர்காலத்தை ஜம்முவிலும் கழிப்பவர்கள். இந்த இரு இனத்தவர்களையும், ஜம்மு பகுதியில் வாழவிட்டால், அது அப் பகுதியில் வாழும் பெரும்பான்மையான இந்துக்களுக்குப் பாதிப்பாக அமையும் என்பது இந்துத்துவவாதிகளின் கருத்து. எனவே அவ்விரு ஆதிவாசி இஸ்லாமிய சமூகத்தினரைப் பயமுறுத்தி அப் பகுதியிலிருந்து விரட்டுவதற்காகத் திட்டமிட்டு செய்யப்பட்டதுதான் ஆசிஃபா மீதான வன்கொடுமை.

அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்களை விரட்டியடிப்பதற்காக ஆசிஃபா எனும் 8 வயது சிறுமி திட்டமிட்டுக் கடத்தப்பட்டு, 8 நாட்கள் இந்துக் கோவிலுக்குள் அடைத்து வைக்கப்பட்டு, அங்கேயே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இறுதியில் கொடூரமான முறையிலே கொலை செய்யப்பட்டிருக்கிறார். குற்றச் செயல் புரிந்தவர்கள் அனைவரும் இந்துத்வா வாதிகள். இவ்வளவு கொடுமையையும் செய்து விட்டு, அது ஒரு ‘தேச பக்திச் செயல் என்று காட்டும் விதமாக, தேசியக் கொடியைக் கையிலே பிடித்துக் கொண்டு „பாரத் மாதா கீ ஜே’ என்று கொக்கரித்திருக்கின்றார்கள்.

கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வரும் விஷ்ணு நந்தகுமார் எனும் இந்துத்தவவாதி, தனது பேஸ்புக் பக்கத்தில் இந்நிகழ்வு குறித்து கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் நல்ல வேளை, அந்தச் சிறுமி இந்தச் சின்ன வயதிலேயே கொல்லப்பட்டு விட்டார்... இல்லாவிட்டால், வளர்ந்த பின் என்றாவது ஒருநாள் மனித வெடிகுண்டாக மாறி, இந்தியாவுக்கு எதிராக மாறிவிடுவார்” என்று எழுதியுள்ளார்.

இவ்வளவு கொடுமைகள் நடந்த நிலையிலும், நமது பாரதப் பிரதமர் இப் பிரச்சினை குறித்து எதுவுமே பேசவில்லை. சர்வதேச அரங்கில் இப்பிரச்சினை விவாதப் பொருளாக மாறியதற்குப் பிறகு ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில், பெயரளவில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தைச் சார்ந்த எந்தவொரு பாஜக தலைவரும், தனது கண்டனத்தைப் பதிவு செய்யவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய செய்தி. ஆண்டாள் விவகாரத்தில் பொங்கி எழுந்தவர்கள், கோவிலுக்குள்ளாக எட்டு வயது சிறுமியின் மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குறித்து கண்டனம் தெரிவிக்க மறுப்பது விந்தையே. இதுதான் மதவெறி சக்திகளின் உண்மை முகம்!

மனிதாபிமானமிக்க பெரியோர்களே, தாய்மார்களே, ஜனநாயகவாதிகளே, தமிழ் சொந்தங்களே, நாம் நமது பொது எதிரியை அடையாளம் காண வேண்டிய நேரம் வந்து விட்டது.

மதவெறி தலைக்கோறிய நிலையில், ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகத்தினரின் பிள்ளைகளையும், பெண்களையும் குறிவைத்து அலைகின்ற கூட்டத்தை,

பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வடநாட்டுப் பண முதலைகளுக்கும் தமிழர் தாயகத்தை தாரைவார்த்து பாலைவனமாக்கத் துடிக்கும் கூட்டத்தை, இனம் காண்போம்! புறம் தள்ளுவோம் மதம் தாண்டி, மனிதாபிமானத்தின் அடிப்படையில் தமிழினமாய் ஒருங்கிணைவோம்!

ஆசிஃபா நமது மகள் என்று முழங்குவோம் அவரைச் சிதைத்த கொடூரர்கள் முறையான தண்டனை பெறும் வரை போராடுவோம்! இனி ஒரு குழந்தைக்கு, இது போன்ற நிலை ஏற்படக் கூடாது எனச் சபதம் ஏற்போம்!

நீதி வெல்லட்டும! சனநாயக சக்திகளின் கரங்கள் உயரட்டும்!

COMMENTS

Share On

More Articles

இயற்கையோடு இயல்பாக வாழிடம் தேடும் தண்ணீர்..

காப்பீட்டு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் ஒரு தம்பதியிடம் தன் நிறுவனத்தின் மாதாந்திர  வாராந்திர தினசரி ஒரு மணி நேரக் காப்பீட்டுத் திட்டங்களை விளக்குகிறார். ‘ஒரு மணி நேரத்துக்குக் கூட காப்பீடு இருக்கிறதா?! ‘ என்று ஆச்சரியப்படும் குடும்பத்த…

கல்வி எனும் ஒரு சக்த..

இம்மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகளின் சிறப்புக் காலம். மாணவ மாணவியர் எந்தப் பள்ளி, எ…

புற்றுநோய்க் களமா தம..

இயற்கை தவறாகப் பயன்படுத்தப்படும் போதெல்லாம் அது ஒரு பேராபத்தாக வெடிக்கிறது. நாம் க…

Non-Violence: A Styl..

Non-Violence: A Style of  Politics for Peace. This is  the title of the …

New Published Books